புதிய உருமாறிய கிருமிகள்: உலக சுகாதார நிறுவனம் கவலை

புதிய உருமாறிய கிருமிகள்: உலக சுகாதார நிறுவனம் கவலை

2 mins read
5bcb2b82-f124-451d-bb08-92a4314d3f3e
-

கோப்­பன்­ஹே­கன்: கொரோனா கிரு­மி­யின் புதிய உரு­மா­றிய வகை­க­ளி­டம் மிக வேக­மாக மற்­ற­வர்­ க­ளுக்கு தொற்­றும் ஆற்றல் இருப்பது குறித்து உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் ஐரோப்­பிய வட்­டார இயக்­கு­நர் கவலை தெரி­வித்­தி­ருக்­கி­றார். டாக்­டர் ஹான்ஸ் குளூக் ஏஎ­ஃப்பி நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் அத­னைத் தெரி­வித்­தார்.

உலக மக்­களில் குறைந்­தது 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு தடுப்­பூசி போட்­டால்­தான் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முடி­வுக்­குக் கொண்டு ­வ­ர­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

பிரிட்­ட­னில் முத­லில் அடை­யா­ளம் காணப்­பட்ட உரு­மா­றிய கொரோனா­வையை விட இந்­தி­யா­வில் முத­லில் காணப்­பட்ட கொரோனா கிருமி மிக வேக­மாக தொற்­றி­யதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­துவதோடு தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் பெருக்க வேண்­டும் என்­றார் அவர். ­

பெருந்­தொற்று காலத்­தில் வேகமான நடவடிக்கைகளே முக்­கி­யம் என்று டாக்­டர் குளுக் வலி­யு­றுத்­தி­னார். உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றை அறிவித்தபோது பல நாடுகள் மெதுவாக செயல்பட்டன என்றார் அவர். குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­களில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­கள் மந்­த­க­தி­யில் உள்ளதாக அவர் குறை­கூ­றி­னார்.

­­வியட்­னா­மில் புதிய உரு­மா­றிய கிருமி

வியட்­னா­மில் புதிய உரு­மா­றிய கொரோனா கிருமி வகை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது என்­றும் அது இந்­தி­யா­வி­லும் பிரிட்­ட­னி­லும் முத­லில் காணப்­பட்ட உரு­மா­றிய கிரு­மி­க­ளின் கலவை என்­றும் வியட்­னா­மிய சுகா­தார அமைச்­சர் வேன் தான் லோங் கூறி­யுள்­ளார்.

வியட்­னா­மின் விஎன் இணைய நாளி­தழ் அது பற்றி நேற்று செய்தி வெளி­யிட்­டது.

ேமலும், புதிய கிருமி காற்­றில் மிக­வே­க­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­றார் திரு வேன்.

குறிப்­பாக, இந்­தி­யா­வில் முத­லில் காணப்­பட்ட உரு­மா­றிய கிரு­மிக்­குள் பிரிட்­ட­னில் காணப்­பட்ட உரு­மா­றிய கிருமி கலந்­தி­ருப்­ப­தாக பரி­சோ­த­னை­கள் காட்­டி­யுள்­ளன.

இந்த புதிய உரு­மா­றிய கிருமி பற்றி உலக மர­பணு வரை­ப­டத்­தில் வியட்­னாம் தக­வல் தெரி­விக்­கும் என்று திரு வேன் கூறி­னார்.

வியட்­னாம் கடந்­தாண்டு கொவிட்-19 பர­வலை சிறப்பாகக் கட்­டுப்­ப­டுத்­தி­யது. ஆனால் கடந்த ஒரு மாத­மாக அங்கு மீண்­டும் கிருமிப் பர­வல் தலை­தூக்­கி­யுள்­ளது. அந்­நாட்­டின் 63 நக­ரங்­களில் 31இல் தொற்று பர­வி­யுள்­ளது.

கிட்­டத்­தட்ட 3,600 பேருக்கு அங்கு கொவிட்-19 தொற்­றி­யுள்­ளது. இவர்­களில் பல­ருக்கு இந்த புதிய உரு­மா­றிய கிருமி இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. புதிய உரு­மா­றிய கிரு­மி­க்கு மிக வேக­மாக பன்மடங்கு பெருக்­கிக் கொள்­ளும் தன்மை உள்­ள­தாக பரி­சோ­த­னை­கள் காட்­டு­கின்­றன.