மியன்மார் குறித்த ஐநா தீர்மானம்: ஆசியான் முயற்சி

மியன்மார் குறித்த ஐநா தீர்மானம்: ஆசியான் முயற்சி

1 mins read
d56e3fe4-21e9-40d3-8948-b4ab946e8b94
-

நியூயார்க்/ஜகார்த்தா: மியன்­மா­ருக்கு எதி­ராக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னப் பொதுச் சபை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள தீர்­மா­னம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான முயற்­சி­யில் ஆசி­யான் நாடு­கள் ஈடு­பட்­டுள்­ளன.

மியன்­மா­ருக்கு எதி­ரான நகல் தீர்­மா­னத்தை வரைந்­துள்ள லீஷ்­டென்ஸ்­டெய்­னுக்கு அவை கடந்த 19ஆம் தேதி கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது. மியன்­மார் தவிர்த்த மற்ற ஆசி­யான் நாடு­கள் அதில் கையொப்­பம் இட்­டுள்­ளன.

மியன்­மா­ருக்கு எதி­ரான ஆயு­தத் தடை­யைக் கோரும் குறிப்பை நகல் தீர்­மா­னத்­தி­லி­ருந்து நீக்­க­வேண்­டும் என்று ஆசி­யான் நாடு­கள் கூறி­யுள்­ளன.

மியன்­மா­ரின் முக்­கிய தலை­வர் திரு­வாட்டி ஆங் சான் சூச்­சியை ராணு­வம் கைது செய்­தது பற்றி நகல் தீர்­மா­னத்­தில் கண்­ட­னம் இடம்­பெற்­றி­ருக்­கிறது. அது கைதுக்கு கவலை தெரி­விக்­கும் வாச­க மாக மாற்­றப்­பட வேண்­டும்.

மேலும் திரு­வாட்டி சூச்சி விடு­விக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் அதில் இடம்­பெற வேண்­டும் என்று ஆசி­யான் நாடு­கள் கூறின.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை தீர்மானம் ஆசியான் நாடுகளுக்கு உதவுவதாக இருக்க வேண்­டும் என்­றால் அது ஒரு­மனதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்­டும் என்று அவை வலி­யு­றுத்­தின.

நகல் தீர்­மா­னத்­தின் மீது கடந்த வாரம் திட்­ட­மி­டப்­பட்ட வாக்­கெ­டுப்பு கடைசி நேரத்­தில் ஒத்தி வைக்­கப்­பட்­டது.