தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்ஸ், சீனா இடையே மீண்டும் பதற்றம்

1 mins read
5873001d-4a7e-4d6e-94e7-15c5b34e401b
-

மணிலா: தென்சீனக் கட­லில் உள்ள தனது எல்­லைக்கு உட்­பட்ட தீவின் அருகே சீனா 'சட்ட விரோத' நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக பிலிப்பீன்ஸ் கூறி­யுள்­ளது.

திட்டு தீவின் அருகே சீனக் கப்­பல்­களும் மீன்­பிடி பட­கு­களும் நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது குறித்து கடந்த வெள்­ளிக்­ கிழமை பெய்­ஜிங்­கி­டம் அர­ச­தந்­திர ரீதியாக எதிர்ப்பு தெரி­வித்­ததாக மணிலா கூறியது.

சீனா அக்­கப்­பல்­களை மீட்டுக்­கொள்ள வேண்­டும் என்று பிலிப்­பீன்ஸ் வெளி­யு­றவு அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

அதே வேளை­யில் சர்ச்­சைக்­கு­ரிய பகு­தி­ தனது எல்ைலக்கு உட்­பட்­டது என­வும் அதன் மீதான "அர­சு­ரி­மையை நிலை­மா­றா­மல் பாது­காக்­கப் போவ­தா­க­வும்" சீன ராணு­வத்­தின் பேச்­சா­ளர் நேற்று தெரி­வித்­தார். அத்தீவில் பிலிப்பீன்ஸ் மேற்கொள்ளும் மேம்பாட்டுப் பணிகளை சீனா எதிர்ப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

சீனக் கப்பல்களும் மீன்­ பிடிப்படகுகளும் கடந்த இரண்டு மாதங்­களாக திட்டு தீவின் அருகே அடிக்­கடி சென்று வரு­வ­தைத் தொடர்ந்து அந்­நாட்­டுக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடையே பதற்­றம் அதி­க­ரித்­துள்­ளது.

சீன ராணு­வம் அக்­கப்­பல்­களை இயக்­கு­வ­தாக பிலிப்­பீன்ஸ் சந்­தே­கப்­ப­டு­கிறது.