மியன்-மா-ரில் சுகா-தார நெருக்-கடி

மியன்-மா-ரில் சுகா-தார நெருக்-கடி

2 mins read
a7b603af-f23a-4bd1-9075-9ed4cb27a7cc
-

யங்­கூன்: கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு, உயிர்­வாயு பற்­றாக்­குறை என ராணுவ ஆட்சி நடை­பெ­றும் மியன்­மா­ரில் சுகா­தார கட்­ட­மைப்பு நெருக்­கடி நிலைக்கு ஆளா­கும் அச்­சு­றுத்­தல் நில­வு­கிறது.

முன்­னைய ஆங் சான் சூச்­சி­யின் ஆட்­சி­யில் பரி­சோ­த­னை­கள், தனி­மைப்­ப­டுத்­தல், சிகிச்சை என கொவிட்-19ஐ கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்த நிலை­யில், அவரை நீக்­கி­விட்டு ராணு­வம் ஆட்­சியை கைப்­பற்­றி­யது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வது தனது முதன்மை பணி­களில் ஒன்று என்று ராணுவ ஆட்­சிக்­குழு கூறி­யி­ருந்­தா­லும் அங்கு தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­வாறு உள்­ளது.

ராணுவ ஆட்­சியை எதிர்ப்­ப­தற்­காக மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், மருத்­துவ ஊழி­யர்­கள் என பல­ரும் குடிமை ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தில் இணைந்­த­தால் பல மருத்­து­வ­

ம­னை­கள் மக்­க­ளுக்குச் சிகிச்சை அளிக்க முடி­யா­மல் திண­று­கின்­றன.

எதிர்ப்பு போராட்­டத்­தில் கலந்து கொண்­ட­தற்­காக 150 சுகா­தார ஊழி­யர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பலர் தேடப்­பட்டு வரு­கின்­ற­னர். இது­த­விர ராணு­வத் தாக்­கு­தல்­களில் 13 மருத்­துவ ஊழி­யர்­கள் மாண்­டு­விட்­ட­தா­க­வும் புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

இந்­திய எல்­லை­யை­யொட்­டி­யுள்ள மியன்­மா­ரின் சிக்கா மருத்­து­வ­ம­னை­யில் 11 பேர் பணி­பு­ரிய வேண்­டிய இடத்­தில் மூவர் மட்­டுமே இருப்­ப­தாக தாதி ஒரு­வர் கூறி­னார்.

ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்கு ஒரு வாரம் முன்பு நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 17,000 கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்ட இடத்­தில் தற்­போது நாளொன்­றுக்கு வெறும் 1,200 பரி­சோ­த­னை­கள் மட்­டுமே மேற்­கொள்­ளப்­ப­டு­வது மிக­வும் கவ­லைக்­கு­ரிய விஷ­ய­மாக பார்க்­கப்­ப­டு­கிறது.

குறை­வான பரி­சோ­த­னை­க­ளால் கிரு­மித்­தொற்று மிக­வும் குறை­வாக தெரி­யக்­கூ­டும் என்­பது குறித்­தும் அண்­டை ­நா­டான இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றால் மியன்­மா­ரில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு பற்­றி­யும் கவலை எழுந்­துள்­ளது.