பெட்டாலிங் ஜெயா: இன்று முதல் அடுத்த இரண்டு வார காலத்திற்கு நடப்பில் இருக்கும் முழு முடக்கத்திற்கு மலேசிய சிறு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும், இந்த சூழலைச் சமாளிக்க அரசாங்கத்திடம் உதவிகளை அவர்கள் கோருகின்ற
னர்.
முழு முடக்கத்திற்கு முன்னதாக அழைப்பு விடுத்தவர்களில் தாங்களும் ஒருவர் என்பதால், முழு முடக்கத்தை எதிர்பார்த்ததாக கூறினார் முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜவஹர் அலி.
ஆனால், கடன் தவணைகளுக்கான அவகாசத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வங்கிகள் அனுமதிப்பதற்கு, அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்றாட தொழிலாளிகள், குறைந்த வருமான ஊழியர்களுக்கு அரசாங்கம் உதவும் என்று தான் நம்புவதாக இன்னோர் வர்த்தகர் கூறினார்.
போதுமான பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்
இதற்கிடையே, மலேசியாவில் கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுபவர்களில், தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் சுமார் 6.89 விழுக்காடாக உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஆடம் பாபா தெரிவித்துள்ளார். இது உலக சுகாதார நிறுவனம் அறிவித்த விகிதமான 5 விழுக்காடு என்பதைவிட அதிகம்.
அதாவது, மலேசியாவில் கண்டறியப்படாத தொற்று சம்பவங்கள் இருப்பதாகவும் பரிசோதனைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும் இது.
சில மாநிலங்களில் இந்த விகிதம் 10 விழுக்காட்டைத் தாண்டிவிட்டதாகவும், கிளந்தானில் அதிகபட்சமாக 11.84 விழுக்காடாகவும் நெகிரி செம்பிலானில் 10.03 விழுக்காடாக உள்ளதாகவும் ஆதாம் தெரிவித்தார்.
இதற்கிடைய, கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகமுள்ள சரவாக்கில், மாவட்டங்களுக்கு இடையி
லான பயணத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.
மலேசியாவில், நேற்று 6,824 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது சனிக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட குறைவு என்றாலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளோரின் எண்ணிக்கை 851ஆக அதிகரித்துள்ளதாக தலைமை சுகாதார இயக்குநர் நூர் ஹிஸ்ஸாம் அப்துல்லா கவலை தெரிவித்தார்.

