ஹனோய்: கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பெருமளவிலான கிருமித்தொற்று பரிசோதனைக்குத் திட்டமிட்டுள்ளது வியட்னாம்.
அண்மையில் சமயக் குழுவோடு தொடர்புடைய புதிய குழுமம் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கிருமித்தொற்று குழுமங்களை விரைந்து கண்டுபிடிக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹோ சி மின் நகரத்தில் கிறிஸ்தவ சமயக் குழு ஒன்றோடு தொடர்புடையவர்களில் குறைந்தது 125 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளவர்களைக் கவனத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 100,000 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வியட்னாம் கிருமிப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருந்தாலும் கடந்த சில வாரங்களாக அங்கு கிருமித் தொற்று வேகமாக பரவி வருகிறது.
வியட்னாமில் இதுவரை கண்டறியப்பட்ட 7,000 தொற்று சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த இரண்டு வாரங்களில் கண்டறியப்பட்டவையாகும்.

