லண்டன்: இங்கிலாந்து காற்பந்துக் குழு நிர்வாகி ஒருவழியாக 26 வீரர்களின் பெயர்களை முடிவு செய்துவிட்டார்.
இதன்மூலம் உலகக் கிண்ணக் காற்பந்தில் 1966ஆம் ஆண்டு பெற்ற வெற்றிக்குப் பின் வெற்றியின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க முடியாத இங்கிலாந்துக் குழு மீண்டும் யூரோ காற்பந்துப் போட்டியில் களம் காண்கிறது. வீரர்களின் தற்போதைய ஆட்டத்திறன், உடற்தகுதி, குழுவின் கட்டுக்கோப்பான ஆட்டத்துக்குத் தேவையான வீரர் களைத் தேர்ந்தெடுப்பது போன்ற சவால்களுக்கு மத்தியில் இங்கிலாந்து நிர்வாகி செளத்கேட் தமது குழுவை இறுதி ெசய்துள்ளார். இந்தப் பின்னணியில் தற்பொழுது டிரெண்ட் அலெக்சாண்டர் ஆர்னால்டை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவிற்கு சிறப்பாக விளையாடி சென்ற ஆண்டு பிரிமியர் லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் விருது ஆகியவற்ைற வெல்ல உதவிய டிரெண்ட் அலெக்சாண்டர் ஆர்னால்டை செளத்கேட் சான் மரினோ, அல்பேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டங்களில் தேர்வு செய்யா தது பலரால் விமர்சிக்கப்பட்டது.

