மூன்-றா-வது நாளாக இறங்-கு-மு-கம்

2 mins read
71229ae0-48e1-465f-a374-4d17b0d1faf0
-

மலேசியாவில் 6,000க்கும் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மிப் பர­வல் தொடர்ந்து மூன்­றா­வது நாளாக குறைந்­துள்­ளது. அதோடு பல நாட்­க­ளுக்­குப் பிறகு அங்கு கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் அன்­றாட எண்­ணிக்கை 6,000த்திற்­கும் கீழ் பதி­வா­னது.

முந்­திய நாள் இந்த எண்­ணிக்கை 6,241ஆக இருந்த நிலை­யில், நேற்று 5,271 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

சிலாங்­கூர், சர­வாக் மற்­றும் நெகிரி செம்­பி­லான் ஆகிய மாநி­லங்­களில் அதிக தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

63 மடங்கு உயர்வு

இதற்­கி­டையே, லபு­வா­னில் கிரு­மிப்­ப­ர­வல் 63 மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக அம்­மா­நில கொவிட் -19 பணிக்­கு­ழுத் தலை­வர் ரித்­து­வான் இஸ்­மா­யில் கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னை­களில் தொற்று உறுதி செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 10 விழுக்­காட்­டிற்கு மேல் உயர்ந்­துள்­ளது.

கடந்த மாத தொடக்­கத்­தில் 30க்கும் குறை­வான தொற்­றுச் சம்­ப­வங்­களே இருந்த நிலை­யில், தற்­போது அங்கு 1,885 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு தற்­போது நாளொன்­றுக்கு 200க்கும் மேற்­பட்ட தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கத் தொடங்­கி­யுள்­ளன.

கட்­சித் தலை­வர்­களைச்

சந்­திக்­க­வுள்ள மன்­னர்

இந்­நி­லை­யில், மலே­சி­யா­வில் அவ­ச­ர­கால பிர­க­ட­னம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடி­வ­டை­ய­வுள்ள நிலை­யில், இவ்­வா­ரத்­தில் மலே­சிய மன்­னர், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் உயர்­மட்ட சந்­திப்­பு­களை நடத்­த­வுள்­ளார்.

முத­லா­வ­தாக வரும் புதன் கிழ­மை­யன்று ஆளும் பெர்­சத்­து­வின் தலை­வ­ரைச் சந்­திக்­க­வுள்­ளார் மன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷா. வியா­ழனன்று எதிர்க்­கட்­சி­யான ஜன­நா­யக கட்சி, பிகே­ஆர் கட்­சி­யை­யும் வெள்­ளி­யன்று மகா­தீ­ரின் பெஜு­வாங் தனா ஏர் கட்­சி­யை­யும் அம்­னோ­வை­யும் மன்­னர் சந்­திக்­க­வுள்­ளார்.