சிட்னி: வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா கிருமித்தொற்று ஆஸ்திரேலியாவில் எப்படி பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முயன்று வரும் வேளையில், அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று 11 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது கடந்த ஒரு வாரத்தில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
அண்மைய கிருமிப் பரவல் காரணமாக விக்டோரியா மாநிலத்தில் இதுவரை 83 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் நேற்று பதிவான அனைத்து தொற்று சம்பவங்களும் முந்திய சம்பவங்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 11 நாளாக கடுமையாக முடக்கப்பட்டுள்ள மெல்பர்னில் வரும் வியாழக்கிழமை இரவு வரை நடப்பில் இருக்கும் தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற உத்தரவுக்காக மெல்பர்ன் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், முடக்க உத்தரவு மெல்பர்னின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டும், சில பகுதிகளில் நீட்டிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது," என்று விக்டோரியா மாநில தலைமை சுகாதார அதிகாரி பிரட் சுட்டன் பதிலளித்தார்.
ஆஸ்திரேலியாவின் மக்கட்
தொகையில் 20 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

