வாஷிங்டன்: 12 வயதுக்கு கீழ் உள்ள சிறாரின் கொரோனா
கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சோதனைக்கான பெரும் ஆய்வைத் தொடங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 90க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் 4,500 பிள்ளைகளிடம் நடத்தப்படுகிறது.
144 பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட ஆய்வில் 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து 10 மைக்ரோ கிராமும், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 மைக்ரோ கிராம் அளவும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஐந்து முதல் 11 வயதுடையவர்கள் பற்றிய தரவுகளை எதிர்பார்ப்பதாகவும் மேலும் அந்த மாத இறுதியில் அத்தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கோர முடிவு செய்துள்ளதாகவும் ஃபைசர் நிறுவன செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயது வரையிலான பிள்ளைகளின் தரவுகளையும் ஃபைசர் நிறுவனம் எதிர்பார்க்கி
றது.