கொழும்பு: கொழும்பு துறைமுகத்துக்கு அருகே மே 20ஆம் தேதி தீப்பிடித்து எரிந்த கப்பலின் தலைவனை இலங்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார் என்றும் போலிஸ் பேச்சாளர் அஜித் ரொஹான தெரிவித்தார்.
முன்னதாக அவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
எக்ஸ்-பிரஸ் பியர்ல் எனும் அந்தக் கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஹஸிரா துறைமுகத்திலிருந்து கிளம்பிய அந்தக் கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலமும் ரசாயன மும் வைக்கப்பட்டிருந்தன. கொழும்பு துறைமுகத்துக்கு அருகே அது விபத்துக்குள்ளானது.

