யங்கூன்: மியன்மாரில் முன்னாள் தடுப்பூசித் திட்டத்தின் தலைவரை ராணுவம் கைது செய்துள்ளது.
ராணுவ எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து சதி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ஓய்வு பெற வேண்டிய வயதில் உள்ள ராணுவத் தலைவர், மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆங் சான் சூச்சி அரசாங்கம், இரண்டு முறை கிருமிப் பரவலை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
ஆனால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தடுப்பூசித் திட்டங்களும் சீர்குலைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொற்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் 10ஆம் தேதி அரசாங்கத்தைக் கீழறுக்கும் வேலையில் ஈடுபட்டதற்காக டாக்டர் ஹிடார் ஹிடார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே மார்ச் மாதம் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்க ெசய்தியாளர் நேதன் மாவுங்கை நேற்று ராணுவம் விடுவித்தது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப் பட்டதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரி வித்தார்.

