கதறலும் கட்டுப்பாடுகளும் உலகிற்கு மட்டுமே; வூஹானுக்கு இல்லை

கதறலும் கட்டுப்பாடுகளும் உலகிற்கு மட்டுமே; வூஹானுக்கு இல்லை

1 mins read
485296f7-3353-4c0d-98cf-7a0df6b41d24
ஜூன் 13ல் வூஹான் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்கள். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: உலகை ஆட்­டிப் படைத்து வரும் கொவிட்-19 கிருமி கிளம்­பிய சீனா­வின் வூஹான் நக­ரில் ஞாயிற்­றுக்­

கி­ழமை (ஜூன் 13) ஓர் அதி­ச­யம் நிகழ்ந்­தது.

அங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற மாபெ­ரும் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் சுமார் 9,000 மாண­வர்­கள் நேர­டி­யாக வந்து பங்­கேற்­ற­னர். அவர்­கள் அனை­

வ­ரும் சமூக இடை­வெ­ளிக் கட்­டுப்­பா­டு­கள் இன்றி கொவிட்-19க்கு முந்­திய வழக்­கத்­தைப் போல சாதா­ர­ண­மாக அமர்ந்­தி­ருந்­த­னர்.

மேலும், மாண­வர்­களில் ஒரு­வர்­கூட முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்க அம்­சம். இந்த 9,000 மாண­வர்­களில் 2,200க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக கடந்த ஆண்­டின் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பங்­கேற்க இய­லா­த­வர்­கள்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் வூஹான் பல்­க­லைக்­க­ழ­கம் பெரும்­ பா­லான பட்­ட­ம­ளிப்பு நிகழ்­வு­களை இணை­யம் வழி­யா­கவே நடத்­தி­யது. மிகக் குறைந்த மாண­வர்­களே அவற்­றில் பங்­கேற்­ற­னர்.

அப்­போது மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­னர்.

ஆனால் இந்த ஜூனில் நடை­பெற்ற பட்­ட­ம­ளிப்பு விழா­வில் எவ்­விதக் கட்­டுப்­பா­டும் இன்றி மாண­வர்­கள் சுதந்­தி­ர­மாக கலந்து­ கொண்­டதை அங்கு எடுக்­கப்­பட்ட படங்­கள் காட்­டின.