விதிகளைத் தளர்த்தும் மெல்பர்ன்
சிட்னி: மெல்பர்ன் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வரும் வேளையில், நாளை முதல் வெளிப்புற நடவடிக்கைகளின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்இல்லை என்பதோடு 25 கி.மீ. தூரம் என்ற கட்டுப்பாடு
இல்லாமல் மக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 24ஆம் தேதி கிருமித்தொற்று குழுமம் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு வாரம் முடங்கிய மெல்பர்னில் சென்ற வார இறுதி முதல் கட்டுப்
பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
மாணவி காணாமற்போன
வழக்கில் மலேசியா புதிய தீர்ப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் காட்டில் காணாமற்போன பிரெஞ்சு-ஐரிஷ் பள்ளி மாணவியின் மரணம் 'தற்செயலா
னது' என்ற முந்தைய தீர்ப்பை நேற்று ரத்து செய்த மலேசிய நீதிமன்றம், அதற்குப் பதிலாக 'முடிவுக்கு வர முடியவில்லை' என்று தீர்ப்பளித்துள்ளது. புதிய தீர்ப்பின்படி குற்றச் செயலுக்கு வாய்ப்பு இருக்கக்கூடும் என்பதால், அது புதிதாக மீண்டும் விசாரணையை மேற்கொள்வதற்கு அதிகாரி
களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கற்றல் குறைபாடு உடைய, 15 வயது நோரா குய்ரின் 2019ல் கோலாலம்பூர் புறநகர் ரிசார்ட்டில் இருந்து காணாமல் போனார். பெரும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது
சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
'உருமாறிய தொற்று பரவும் ஆபத்து'
பேங்காக்: தாய்லாந்தின் சுற்றுலாத் தலமான புக்கிட்டிற்கு இவ்வளவு விரைவாக மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தால், அம்மாநிலத்தில் உருமாறிய கிருமித்தொற்று பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக அந்நாட்டின் மகிடோல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார். உள்ளூர் மக்களுக்குத் தடுப்பூசி போடப்
பட்டிருந்தாலும், அது உருமாறிய கிருமித்தொற்றில் இருந்து பாதுகாக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வரும் ஜூலை முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் புக்கிட்டிற்கு நேரடியாக சுற்றுலா செல்ல அந்நாடு அனுமதி
அளித்துள்ளதையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
'வைரக்கல்' என்று குவிந்த மக்கள்
குவாஹலதி: ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவில் உள்ள குவாஹலதி கிராமத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் படிகம் போன்ற பளபளக்கும் கற்களைக் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து அது வைரமாக இருக்கக்கூடும் என்று நம்பி
மக்கள் பலரும் அங்கு திரண்டனர்.
அது மதிப்பற்ற கற்களாக இருக்கக்கூடும் என்ற அரசாங்கத்தின் எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மண்வாரியாலும் வெறும் கைகளாலும் மண்ணைத் தோண்டி கற்களைக் கைப்பற்றிய சிலர் அதைப் பாதுகாப்பாகவும் வைத்துள்ளனர். இதற்கிடையே, கற்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக புவியியல், சுரங்க வல்லுநர்கள் குழுவை
அரசாங்கம் அங்கு அனுப்பியுள்ளது.

