கோலாலம்பூர்: கொவிட்-19 உருமாறிய கிருமிகளுக்கு எதிரான செயல்திறனை அதிகரிக்க இரு வெவ்வேறு தடுப்பூசி மருந்துகளைப் போடுவது குறித்து மலேசியா பரிசீலித்து வருகிறது.
அறிவியல் அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று பயிலரங்கு ஒன்றில் இதனை தெரிவித்தார்.
நாட்டில் கிருமித்தொற்று தொடர் கதையாக நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்று அமைச்சர் கைரி நம்புகிறார். இதனால் மலேசியா ஒட்டு ெமாத்த எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடும் என்ற கண்ணோட் டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
முதல்முறை ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசியையும் இரண்டாவது முறை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியையும் போடும் கலப்பு தடுப்பூசி முறையை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதற்காக ஜெர்மனியின் தரவுகள் ஆராயப்படுகின்றன. இப்படி தடுப்பூசிகளைக் கலந்து போடுவதால் வெவ்வேறு உருமாறிய கிருமிகளுக்கு எதிரான செயல்திறன் அதிகரிக்கும் என்று திரு கைரி குறிப்பிட்டார்.
இதற்கிடையே செப்டம்பரில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அர சாங்கம் திட்டமிட்டுள்ளதாக சபா நாயகர் அஸார் அஸிஸான் ஹாருன் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடியில் அதுவே விவேகமான முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று மாமன்னர் பரிந்துரை செய்துள்ள வேளையில் சபாநாயகரின் கருத்து வெளியாகி யுள்ளது.
கடைசியாக 2020 டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த ஜனவரியிலிருந்து நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.

