ஆப்பிள் டெய்லியில் ேசாதனை; பலர் கைது

ஆப்பிள் டெய்லியில் ேசாதனை; பலர் கைது

1 mins read
8d31cab2-e422-45a2-8bd6-33e6f05beed1
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் ஜன­நா­ய­கத்­துக்கு ஆத­ர­வா­கச் செயல்­படும் ஆப்­பிள் டெய்லி அலு­வ­ல­கத்­தில் நுழைந்த 500க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் செய்­தி­யா­ளர்­க­ளின் கணி­னி­களைக் கைப்­பற்­றி­னர்.

அவர்­க­ளு­டைய கட்­டு­ரை­கள் தேசிய பாது­காப்­புச் சட்­டத்தை மீறும் வகை­யில் இருக்­கின்றன என்று அதி­கா­ரி­கள் கூறி­னர். ஆப்­பிள் டெய்லி பத்­தி­ரி­கை­யின் ஐந்து நிர்­வா­கி­களும் சுற்றி வளைத்து கைது செய்­யப்­பட்­ட­னர். கைது ஆணை­யு­டன் உள்ளே நுழைந்த அதி­கா­ரி­கள், செய்­தி­யா­ளர்­க­ளின் நாற்­கா­லி­களில் உட்­கார்ந்து கணி­னி­களைச் சோதனையிட்டனர். செய்­தி­யா­ளர் ­க­ளின் கைபேசி, மடி­க­ணினி உட்­பட அவர்­க­ளின் பொருட்­கள் கைப் ­பற்­றப்­பட்­டன. அண்­மை­யில் இந்­தப் பத்­தி­ரி­கை­யின் உரி­மை­யா­ள­ரும் தொழி­ல­தி­ப­ரு­மான ஜிம்மி லாய் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். அவ­ரது சொத்­து­களும் தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் முடக்கப் பட்டன. இதையடுத்து அவரது அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஹாங்காங் கில் ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர்.