பெய்ஜிங்: சீனா, மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைத்தது.
ஜியூகுவான் ஏவுதளத்திலிருந்து மூவரும் 'மார்ச்-2எஃப்' ஏவுகணை மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏழு மணி நேரத்தில் அவர்களுடைய விண்வெளிக் கலம் 'டியான்கோங்' ஆய்வு நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. அங்கு மூன்று மாதங்கள் தங்கி யிருந்து ஆய்வில் ஈடுபட வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

