கோலாலம்பூர்: மருத்துவமனைக்கு செல்லும் முன்னேரே உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா கிருமிகள் காரணமாக இருக்கலாம் என்று மலேசிய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டெல்டா வகை கிருமி போன்ற, புதிய வகை கிருமிகளின் காரணமாக நோயாளிகளின் நிலைமை சீக்கிரம் மோசமடையக்கூடும் என்று அரசாங்க கொவிட்-19 தொற்று
நோயியல் பகுப்பாய்வு, உத்திகள் பணிக்குழுவின் தலைவரும் பேராசிரியருமான அவாங் புல்கிபா அவாங் மஹ்மூத் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ஜூன் 14 ஆம் தேதி நிலவரப்படி உயிரிழந்த நிலையில் 370 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அல்லது 195 பேர் மே 14 முதல் ஜூன் 14 வரையிலான நான்கு வாரங்களில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். கடந்த ஆண்டு முழுவதிலும் இந்த எண்ணிக்கை 136ஆக இருந்
தது.
"மருத்துவமனைக்கு வருவதற்குள் மாண்டவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் எங்களிடம் இல்லை, எனவே அவர்கள் எதனால் இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினம். மலேசியாவின் மரபணு அல்லது தொற்று
நோயியல் கண்காணிப்பு குறைவாக உள்ளது, எனவே உருமாறிய கிருமிப் பரவல் குறித்த தெளிவான தகவல் இல்லை," என்றார் அவாங் புல்கிபா.
மேலும் சளிக்காய்ச்சல், லேசான இருமல் போன்ற அறிகுறிகளை அவர்கள் சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம் என்ற அவர், உருமாறிய கிருமியின் அறிகுறிகள் வெவ் வேறாக இருப்பதையும் சுட்டினார்.
தொற்று அதிகரிப்பு
மலேசியாவில் கடந்த ஒரு வாரமாக இறங்குமுகத்தில் இருந்த தொற்று சம்பவங்கள் நேற்று 6,440ஆக உயர்ந்தது.
இது, இரண்டாம் கட்ட தேசிய மீட்சித் திட்டம் தாமதமாகக்கூடும் என்பதைக் காட்டுவதாக மலாய் மெயில் ஊடகம் கூறுகிறது.
மாணவர்களுக்குத் தடுப்பூசி
இதற்கிடையே, ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடப்படும் என்று அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்திற்கான அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.