பெர்லின்: கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத மற்ற பயணிகளுக்கு இம்மாதம் 25ஆம் தேதி முதல் ஜெர்மனி தனது எல்லையை மீண்டும் திறக்கிறது.
ஆனால் பயணிகள் ஜெர்மனிக்குள் நுழைவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே ஐரோப்பிய மருந்துகள் முகமை ஒப்புதல் அளித்த தடுப்பூசிப் போட்டிருக்க வேண்டும்.
இதற்கிடையே, அமெரிக்கா, ஹாங்காங், மக்காவ், தைவான் உள்ளிட்ட நாடுகள் மீதான பயணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கி உள்ளது.