சிட்னி: டெல்டா வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி
யில் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஐந்து நாட்களுக்கு நடப்பில் இருக்கும்.
ஆனால் கடைத்தொகுதிகள், திரையரங்குகள் போன்ற உள்ளரங்க நடவடிக்கைகளின்போதும் மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் அனைத்து வெளிப்புற நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளோடு தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, வெளிநாட்டு விமான ஊழியர்களை அழைத்துச் செல்லும் ஓட்டுநர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு பேருக்கு டெல்டா வகை கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
"மக்கள் பதற்றமடைய வேண்டாம், ஆனால் அதே சமயம் அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.