கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படு
வதற்கு முன்னர் முக்கியமான அம்சங்களைப் பற்றி ஆராய அரசு மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு
உள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
இது நேரடியாக அல்லது இணையம், நேரடியாக என இரண்டும் கலந்த நாடாளுமன்ற கூட்டமாக இருக்க வேண்டுமா என்பதைக் குழு பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டர் தடுப்பூசி மையத்தை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டபின்னர், ஏதேனும் சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற கூட்டத்தைத் தாமதப்படுத்துவது தனது நோக்கம் அல்ல, ஆனால் அவை கவனமாக ஆராயப்பட வேண்டிய பிரச்சினை என்றார் அவர்.

