தைப்பே: தைவானில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அமெரிக்கா 2.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தைவானுடன் அரசியல் ரீதியிலான உறவைப் பலப்படுத்திக் கொள்ள சீனாவோடு போட்டிப் போடும் அமெரிக்கா 'தடுப்பூசி ராஜதந்திரம்' மூலம் அதை வலுப்
படுத்தப் பார்க்கிறது.
முன்பு தைவானுக்கு 750,000 தடுப்பூசிகள் கொடுப்பதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், பைடன் நிர்வாகம் தற்போது அதை அதிகரித்து உள்ளதற்கு தைவான் அதிபர், வெளியுறவு அமைச்சர் ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஹாங்காங்கில் உள்ள பிரதிநிதித்துவ அலுவலகத்தில் பணிபுரியும் தைவான் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்குவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தைவான் மீது உரிமை கோருவதை ஆதரிக்கும் பெய்ஜிங்கின் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு ஹாங்காங் அரசாங்கம் தனது அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தததால் தனது அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறுவதாக தைவான் தெரிவித் தது.


