இது உலகளவில் போடப்பட்ட தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
பெய்ஜிங்: சீனாவில் ஒரு பில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது உலகளவில் போடப்பட்ட தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
உலகளவில் 2.5 பில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி புள்ளி விவரம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆனால் சீன மக்கள்தொகையில் எத்தனை விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சீனா வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அங்கு மெதுவடைய தொடங்கி உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக சில மாநிலங்கள் இலவசமாக தடுப்பூசிகள் போடுகின்றன.
மத்திய அன்ஹுவி மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு முட்டைகள் இலவசமாக கொடுக்கப்படு
கின்றன. பெய்ஜிங்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்குப் பொருட்கள் வாங்குவதற்கான பற்றுச்
சீட்டுகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த மாத இறுதிக்குள்
கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.

