சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அழைப்பு

சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அழைப்பு

1 mins read
4bc29902-a3bb-4354-bd69-c3e719d34893
-

வேக­மாக பர­வக்­கூ­டிய உரு­மா­றிய வகை கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதை அதி­க­மான நாடு­கள் உறுதி செய்­துள்ள நிலை­யில், பொது சுகா­தார, சமூக நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­த­வும் அவற்­றைத் தீவி­ர­மாக செயல்­ப­டுத்­த­வும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்கு உலக சுகா­தார அமைப்பு அழைப்பு விடுத்­துள்­ளது.

மேலும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்­கா­மல் தடுக்­கும் வகை­யில் தடுப்­பூசி போடு­வதை விரை­வு­ப­டுத்த வேண்­டும் என்­றும் அமைப்பு கூறி­யுள்­ளது.

"சோதனை, தட­ம­றி­தல் மற்­றும் தனி­மைப்­ப­டுத்துதல் போன்­ற­வற்றை நாம் தொடர்ந்து வலுப்­ப­டுத்த வேண்­டும்.

"சமூக இடை­வெளி, கை கழு­வு­தல், முகக்­க­வ­சம் அணி­வது போன்­றவை முழு­மை­யா­க­வும் நீண்ட காலத்­திற்­கும் பின்­பற்­றப்­பட வேண்­டும்," என்று தென்­கி­ழக்கு ஆசி­யா­விற்­கான உலக சுகா­தார அமைப்­பின் வட்­டார இயக்­கு­னர் டாக்­டர் பூனம் கேத்­ர­பால் சிங் கூறி­னார்.

இந்­தியா, பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம் உள்­ளிட்ட நாடு­க­ளைத் தொடர்ந்து இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் மாலத்­தீவு மற்­றும் மியன்­மார் நாடு­க­ளி­லும் உரு­மா­றிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.