சிங்கப்பூர் பயணிகளுக்கு தனிமைக்காலம் குறைப்பு

சிங்கப்பூர் பயணிகளுக்கு தனிமைக்காலம் குறைப்பு

1 mins read
86c800a7-66cc-4c91-9c11-84d3d3e6fdd7
தளர்வுகளை அறிவித்த ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­களை தொற்­று­நோய் அபா­ய­முள்ள நாடு­க­ளாக ஹாங்­காங் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நிலை­யில் சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­களுக்கு தனி­மைப்­ப­டுத்­தும் காலத்தை ஏழு நாட்­க­ளாக குறைக்க ஹாங்காங் திட்ட மிட்டுள்ளது.

ஆனால் அவர்­கள் முழு­மை­யான தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர் ­க­ளாக இருக்க வேண்­டும்.

பரி­சோ­த­னை­யிலும் அவர் களுக்கு கிரு­மித்­தொற்­று இருக்கக்­ கூ­டாது என்று சவுத் சைனா மார்­னிங் போஸ்ட் தெரி­வித்­தது.

இது தொடர்பான தளர்வுகளை ஹாங்­காங்­கின் தலைமை நிர்­வாகி யான கேரி லாம் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கவிருந்தார்.

ஹாங்­காங்­கில் கிரு­மிப்ப­ர­வலைக் கட்­டுப்­ப­டுத்த தீவி­ர­மான கட்­டுப்­பா­டு­கள் அம­லில் உள்­ளன. ஆனால் தற்போது தொற்று கட்­டுக்­குள் இருப்­ப­தால் சில தளர்­வு­களை அறி­விக்க ஹாங்­காங் தயா­ராகி வரு­கிறது. தற்­போது வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் 21 நாட்­களில் தனி­மை­யில் இருக்க வேண்­டும்.

ஒர்க் விசா வைத்­தி­ருப்­ப­வர்­கள், நோய்த்­தொற்று அபா­ய­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­கள் ஆகி­யோ­ருக்கு புதிய ஏழு நாள் தனிமை உத்­த­ரவு பொருந்­தும்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் அர­சாங்­க ஆலோ­ச­னைக் குழு வெளி­யிட்ட தளர்வு பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் ஏற்­றுக்கொண்­ட­தைத் தொடர்ந்து சில நாடுகளுக்கு தனி­மைப்­ப­டுத்­தும் காலம் குறைக்கப்­ ப­ட­வி­ருக்­கிறது. புதிய மாற்றம், ஹாங்காங்கின் தளர்வுகளில் முக்கிய மைல்கல் என்று கூறப்படு கிறது. நோய்த் தொற்று அபா­ய­முள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூ­ரைத் தவிர ஜப்­பான், பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி ஆகிய நாடு­களும் இடம்­பெற்­றுள்­ளன.