நாடாளுமன்றத்தைக் கூட்டுக: அம்னோ

நாடாளுமன்றத்தைக் கூட்டுக: அம்னோ

2 mins read
0070abcb-e718-47eb-a382-9e026c03e608
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய அர­சாங்­கம் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்தை இரு வாரங்­களில் நடத்­தி­யாக வேண்­டும் என்று அம்னோ கட்­சித் தலை­வர் அஹ­மட் ஸாஹிட் ஹமிடி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மலே­சி­யாவை ஆளும் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள ஆகப்­பெ­ரிய கட்­சி­யான அம்னோ, நாடாளு மன்­றத்தை விரை­வில் கூட்ட வேண்­டும் என்ற மாமன்­ன­ரின் விருப்­பத்தை முழு­மை­யாக ஆத­ரிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

"இதனை அர­சாங்­கம் செய்­யத் தவ­றி­னால் மாமன்­னரை அவ­ம­திப் ­ப­து­போல கரு­தப்­படும்," என்று நேற்று திரு ஸாஹிட் கூறி­னார்.

பெகான் டடுக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டாக்­டர் அஹ­மட் ஸாஹிட், மாமன்­ன­ரி­டம் தெரி­வித்­த­தைப் போல பல்­வேறு பிரச்­சி­னை­கள் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

அப்­போ­து­தான் அர­சாங்க நிர்­வாக விவ­கா­ரங்­களில் வெளிப்­ப­டைத்­தன்மை உறுதி செய்­யப்­படும் என்றார் அவர்.

இம்­மா­தம் 16ஆம் தேதி பேசிய மாமன்­னர் நாடா­ளு­மன்­றம் விரை­வில் கூட்­டப்­பட வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

அனைத்­துக் கட்­சி­க­ளின் கருத்­து­களை கேட்­ட­றிந்த பிறகு மாமன்­னர் இவ்­வாறு கூறி­ய­தா­க­வும் சொல்­லப்­பட்­டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்­குப் பிறகு அவ­ச­ர­நி­லையை நீட்­டிக்க மாமன்னருக்கு விருப்பமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ, எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற மார்ச் மாதம் நடைபெற்ற அம்னோ பொதுக் கூட்டத்திலும் அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை மீட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்யப் பட்டது. தற்போதைய அமைச்சரவை யில் அம்னோவைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

இருந்தாலும் நாட்டின் 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பொதுத்தேர்தலை தள்ளிப்போடுவதற்கு வேறு காரணங்கள் இல்லை என்று அம்னோ தலைவர் டாக்டர் அஹமட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.