தோக்கியோ: தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 10,000 ரசிகர்கள் வரை அனுமதிக்கப் படவிருக்கின்றனர். சுகாதார துறை நிபுணர் களின் எச்சரிக்கையையும் மீறி தோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. வெளிநாட்டு பார்வையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு நடைபெறும் அரங்கத்தில் 50 விழுக்காடு உள்ளூர் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ரசிகர்கள் கத்தவோ சத்தமாக பேசவோ கூடாது. விளையாட்டு முடியும் வரை முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின் பற்றி முறையான நடவடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் போட்டியை ரசிகர்களுடன் நடத்த முடியும் என்று தான் நம்புவதாக தோக்கியோ ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ தெரிவித்தார்.
ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.

