அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க தாய்லாந்து ஆயத்தம்

அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க தாய்லாந்து ஆயத்தம்

1 mins read
6f614327-f864-411a-8489-1edf070a3442
-

பேங்­காக்: தாய்­லாந்­தின் புகழ்­பெற்ற சுற்­று­லாத்­த­ள­மான புக்­கெட்டை ஜூலை 1ஆம் தேதி மீண்­டும் அனைத்­து­லக வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் திறந்து விடு­வ­தற்கு அந்­நாட்­டின் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துறை அனு­மதி அளித்­துள்­ளது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் சக்­ச­யாம் சின்­சோப் நேற்று இதனை சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துறை சந்­திப்­புக் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டம் வெற்றி பெற்­றால் தாய்­லாந்­தில் உள்ள மேலும் ஒன்­பது சுற்­று­லாத் தளங்­கள் வெளி­நாட்­டி­ன­ருக்கு மீண்­டும் திறந்து விடப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

தாய்­லாந்து மூன்று மாதங்­களில் அனைத்­து­லக வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அதன் சுற்றுலாத் தளங்களை முழு­மை­யா­கத் திறந்து விடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அமைச்­சர் சக்­ச­யாம் சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

தொற்­றுக்கு எதி­ரான அனைத்­து­லக சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து அமைப்­பின் வழி­காட்டி முறை­களை கடைப்­பி­டிப்­ப­தில் விமான நிறு­வ­னங்­கள் கடு­மை­யு­டன் நடந்து கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.