பேங்காக்: தாய்லாந்தில் கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சுட்டதால் நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு முன்பு கடையில் இருந்த ஒருவரையும் அவர் சுட்டுக் கொன்ற தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேங்காக்குக்கு அருகே பாதும் தானி தற்காலிக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் அனை வரும் போதைப் புழங்கிகள் என்று நம்பி 23 வயது சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதாக வட்டார போலிஸ் தலைவர் அம்போல் புவாராப்போர்ன் தெரிவித்தார். தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்ட இடத்தில் முன்பு மறுவாழ்வு இல்லமாக இருந்தது. சந்தேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே பேங்காக்கில் நேற்று ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருமிப் பரவலால் பாதிக்கப்படலாம் என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி பேரணி நடைபெற்றது.
பிரதமர் பிரயுத் சான் ஓ பதவியேற்றதிலிருந்து பேங்காக்கில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு முன்னாள் ராணுவத் தலைவரான பிரயுத் சான் ஓ ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து உள்ளார்.

