ஜெரூசலம்: இஸ்ரேல், அதன் குடிமக்கள் கட்டடங்களுக்குள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறிய பத்து நாட்களில் மீண்டும் அந்த விதி முறையை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது. அங்கு டெல்டா வகைக் கிருமிப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் அதனை அறிவித்தது.
இஸ்ரேலில் தடுப்பூசி போடும் இயக்கம் துரிதமாக நடைபெற்று வந்ததால் அது கொவிட்-19 கிருமி தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தியது.
ஆனால் இரண்டு பள்ளிகளில் டெல்டா வகை கிருமி பரவியதன் காரணமாக, கடந்த வாரத்தில் அங்குள்ள தொற்றுச் சம்பவங்கள் 138ஆக உயர்ந்தன.
அதனால் வீட்டைத் தவிர வேறு எல்லா கட்டடங்களிலும் முகக் கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

