மலேசியா கடும் நடவடிக்கை

மலேசியா கடும் நடவடிக்கை

1 mins read
4cb02cc7-0b1c-4a1a-a9cf-68a40c69cf7c
-

புத்­ரராஜெயா: மலே­சியா கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் தொழிற்­சா­லை­க­ளுக்­கும் எதி­ராக கடும் சோத­னை­ க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள இருக்­கிறது. உள்­துறை அமைச்­சர் ஹம்ஸா ஸைனு­தின் இதனை நேற்று அறி­வித்­தார்.

பொது­மு­டக்­கம் நடப்­பில் இருந்­த­போ­தும் நிறு­வ­னங்­களை அவர் எச்­ச­ரித்­தார். ஆனால் இரண்டு மாத முடக்­கத்­தால் தாங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­கங்­கள் குறை­பட்டு வரு­கின்­றன.

இவ்­வே­ளை­யில் தற்­போ­தைய கொவிட்-19 பர­வ­லில் இளை­யர்­கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி வேறு இடங்­களில் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளும்­படி குடும்­பத்­தார் அவர்­க­ளி­டம் கேட்டு வரு­வ­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் தெரி­வித்­தது.