யங்கூன்: மியன்மாரின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான மாண்டலேயில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அந்நாட்டு ராணுவம் லாரி நிறைய ஆயுதங்களைக் கைப்பற்றியதாக உள்ளூர் செய்தி நிறுவனம் கூறியது.
பிப்ரவரி முதல் தேதி திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்கரர்களை கைது செய்ததுடன், எதிர்ப்பவர்களைக் கொன்றம் ஒடுக்கியும் வருகிறது. அதற்கு பதிலாக, ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்போர் கிளர்ச்சிக் குழுக்களை அமைத்து, சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் சிறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்ட மாண்டலே மக்கள் தற்காப்புப் படையினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததில் எட்டு கிளர்ச்சியாளர்கள் மாண்டதாகவும் எட்டுப் பேர் கைதானதாகவும் அரசாங்கத்தின் மியன்மாரின் உலகப் புது ஒளி செய்தித்தாள் தெரிவித்தது.
மாண்டலே அருகே லாரியில் 100 துப்பாக்கிகள், 10,000 குண்டுகள், 499 கையெறி குண்டுகளை ராணுவம் கைப்பற்றியதாக செய்தித் தாள் கூறியது.
பிடிபட்ட கிளர்ச்சிக் குழுவினர், கச்சின் சுதந்திரப் படையினர் தங்களுக்கு பயிற்சி அளித்தனர் எனக் கூறியதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டது.

