கருத்து வேறு­பாடு கார­ண­மாக அம்­னோ­வுக்கு சிக்­கல்

கருத்து வேறு­பாடு கார­ண­மாக அம்­னோ­வுக்கு சிக்­கல்

1 mins read
e7886c56-3fe6-42e0-a88b-e84bb5638562
-

கோலா­லம்­பூர்: அம்னோ கட்­சித் தலை­வர் அக­மது ஸாஹிட்

ஹமி­டிக்கு எதி­ராக கட்சியின் மூத்த உறுப்­பி­னரும் ஆறு தவணை நாடா­ளு­மன்ற உறுப்பினரு­மான நஸ்‌ரி அப்­துல் அசிஸ் அண்­மை­யில் கருத்து தெரி­வித்­தார்.

அம்னோ கட்­சி­யி­ன­ரி­டையே கருத்து வேறு­பாடு நில­வு­வதை இது காட்­டு­வ­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்­த­கைய நிலை அம்­னோ­வுக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் அம்­னோ­வைச் சேர்ந்த 38

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.

அவர்­களில் 25 பேரு­டைய ஆத­ரவை திரு ஸாஹிட் இழந்­து­விட்­ட­தாக திரு நஸ்‌ரி தெரி­வித்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான அன்­வார் இப்­ரா­ஹிம்மை அம்னோ நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள்

ஆத­ரிக்­க­வில்லை என்று திரு நஸ்‌ரி தெரி­வித்­தார்.

ஆனால் அன்­வார் இப்­ரா­ஹிம் பிர­த­ம­ராக வேண்­டும் என விரும்பும் திரு ஸாஹிட், அம்னோ நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அவரை

ஆத­ரிப்­ப­தாக மாமன்­ன­ரி­டம் பொய் கூறி­யுள்­ள­தாக திரு நஸ்‌ரி கூறினார்.