கொலைக் குற்­ற­வா­ளிக்கு பொது மன்­னிப்பு; இலங்­கை­யில் கொந்­த­ளிப்பு

கொலைக் குற்­ற­வா­ளிக்கு பொது மன்­னிப்பு; இலங்­கை­யில் கொந்­த­ளிப்பு

2 mins read
6f8eadad-9b53-43b9-b949-b5da6ba7caec
இலங்கை அதி­ப­ரால் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்ள துமிந்த சில்வா. படம்: பிபிசி -

கொழும்பு: இலங்கை அர­சி­யல்­வாதி பரத லட்­சு­மண பிரே­ம­

சந்­தி­ரா­வை­யும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் மூவ­ரை­யும் 2011ஆம் ஆண்­டில் நடை­பெற்ற துப்­பாக்கிச் சூட்­டில் கொலை செய்த குற்­றத்­துக்­காக அந்­நாட்­டின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துமிந்த சில்­வா­வுக்கு 2016ஆம் ஆண்­டில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இலங்கை அதி­பர் கோட்­டா­பய ராஜ­பக்­சே­வுக்கு நெருக்­க­மா­ன­வ­ரான துமிந்த சில்­வா­வுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட 94 பேரில் துமிந்த சில்­வா­வும் ஒரு­வர்.

இதற்கு மனித உரிமை ஆர்­வ­லர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

"இலங்கை அர­சாங்­கம் சட்­டத்­துக்கு மதிப்பு தர­வில்லை என்­பதை இது காட்­டு­கிறது. பொது­மக்­கள் நலன் மீது அதற்கு இருக்க வேண்­டிய பொறுப்பை அது அலட்­சி­யப்­ப­டுத்­து­கிறது," என்று இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பு­வில் இருக்­கும் மனித உரிமை வழக்­க­றி­ஞர் அம்­பிகா சத்­கு­ண­நா­தன் பிபிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தமது அதி­ருப்­தி­யைத் தெரி­வித்­தார்.

"என் தந்­தை­யின் கொலைக்கு நியா­யம் கேட்டு நீண்­ட­கா­லத்­துக்கு சட்­ட­ரீ­தி­யா­கப் போரா­டி­னோம். தற்­போது கொலைக் குற்­ற­வா­ளிக்கு அதி­பர் பொது மன்­னிப்பு வழங்­கி­விட்­டார். இலங்­கை­யில் நீதித் துறையை மக்­கள் இனி எவ்­வாறு நம்­பு­வர்? எங்­கள் பாது­காப்பு குறித்து எங்­க­ளுக்­குக் கவ­லை­யாக இருக்­கிறது," என்று கொலை­யுண்ட திரு பரத லட்­சு­ம­ணன் பிரே­ம­சந்­தி­ரா­வின் மகள் திரு­வாட்டி ஹிரு­னிக்கா பிரே­ம­சந்­திரா தெரிவித்­தார்.

அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்று சில மாதங்­களில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இலங்கை ராணுவ வீர­ரான சுனில் ரத்­ன­நா­ய­கே­வுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சே பொது மன்­னிப்பு வழங்கி சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­தார்.

2000ஆம் ஆண்­டில் யாழ்ப்­

பா­ணத்­தின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள மிரு­சு­வில் கிரா­மத்­தில் எட்டு தமி­ழர்­க­ளைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக சுனி­லுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. மாண்­ட­வர்­களில் ஐந்து வயது குழந்­தை­யும் இரண்டு பதின்­ம­வ­ய­தி­ன­ரும் அடங்­கு­வர்.

தற்­போது துமிந்த சில்­வா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொது மன்­னிப்பு பற்றி இலங்கை அதி­ப­ரின் அலு­வ­ல­கம் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டது.

துமிந்த சில்­வா­வுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளதை கண்­டித்து இலங்­கை­யில் பலர் சமூக வலைத்­த­ளங்­களில் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.