ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பிய கிண்ணத்தை டென்மார்க் ஏந்தி 29 ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் கிண்ணத்தை வெல்ல முனைப்புடன் இருக்கும் டென்மார்க் குழு நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தொடக்கத்தில் வேல்ஸ் சிறப்பாக விளையாடியபோதும் நேரம் செல்லச் செல்ல, டென்மார்க் ஆட்டத்தைத் தனது வசமாக்கிக்கொண்டது.
டென்மார்க்கின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வேல்ஸ் அணியின் தற்காப்பு சுருண்டது.
1992ஆம் ஆண்டில் டென்மார்க் கிண்ணம் ஏந்தியதை அடுத்து, இவ்வாண்டின் போட்டியில்தான் அது காலிறுதிச்
சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அரையிறுதி வரை சென்ற வேல்ஸின் பயணம் முடிந்துவிட்டது.

