சிரியா-ஈராக் எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்

1 mins read
5b045cf5-ae06-4d5f-a212-89680cbd1410
-

வாஷிங்­டன்: ஈராக்-சிரியா எல்­லை­யில் ஈரான் ஆத­ரவு போரா­ளி­க­ளுக்கு எதி­ராக மற்­றொரு சுற்று வான்­வ­ழித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக அமெ­ரிக்கா ஞாயிற்­றுக் கிழமை அன்று தெரி­வித்­தது.

இம்­முறை ஈராக்­கில் உள்ள அமெ­ரிக்க வீரர்­கள், தள­வாட வச­தி­கள் மீது வானூர்தி மூலம் தாக்­கப்பட்டதால் பதி­ல­டி தரப்­பட்­டுள்­ளது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­தது.

சிரி­யா­வில் உள்ள இரண்டு ஆயு­தக் கிடங்­கு­க­ளுக்­கும் ஈராக்­கில் உள்ள மற்­றொரு கிடங்­குக்­கும் குறி வைத்து இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இதில் யாரா­வது கொல்­லப்­பட்­டார்­களா அல்­லது காயம் அடைந்­தார்­களா என்­பது பற்றி விவரம் தெரி­ய­வில்லை.

ஆனால் சேதம் குறித்து மதிப்­பீடு செய்­யப்­பட்டு வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே சிரியா-ஈராக் எல்­லைத் தாக்­கு­த­லில் நால்­வர் கொல்­லப்­பட்­ட­தாக கட்­ட­யப் சாயித் அல்-ஷுஹாடா என்ற போராளி அமைப்பு தெரி­வித்­தது. இதற்­குத் தக்க பதி­ல­டி தரப்­படும் என்­று அது சூளு­ரைத்­தது.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­விட்­ட­தைத் தொடர்ந்து இந்த வான்­வ­ழித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அவர் பத­விே­யற்று இரண்­டா­வது முறை­யாக இந்­தத் தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் சிரி­யா­வில் தாக்­கு­தல் நடத்த அதி­பர் பைடன் முதல் உத்­த­ர­வைப் பிறப்­பித்­தி­ருந்­தார்.

அப்­போது ஈராக்­கில் நடந்த ஏவு­க­ணைத் தாக்­கு­த­லுக்­குப் பதி­ல­டி­யாக அந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இந்த நிலையில் அமெ­ரிக்க வீரர்­க­ளைப் பாது­காப்பதில் அமெ­ரிக்க அதி­பர் உறு­தி­யோடு செயல்­ப­டு­வார் என்பதை அண்மைய தாக்கு தல்கள் காட்டுவதாக அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்சு கூறி உள்ளது.