கிருமிப் பரவல்; ஆஸ்திரேலியாவின் 7வது நகரமும் முடக்கம்

கிருமிப் பரவல்; ஆஸ்திரேலியாவின் 7வது நகரமும் முடக்கம்

2 mins read
b1249214-826b-42fe-b4c8-3ac72a2d0bd0
-

கேன்­பரா: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அதி­வே­கத்­தில் பர­வும் தன்மை கொண்ட டெல்டா கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக 7வது நக­ரத்­தை­அதி­கா­ரி­கள் முடக்­கி­யுள்­ள­னர்.

புதன்­கி­ழமை அன்று தொற்­றுச்­சம்­ப­வங்­கள் 200ஐ தொட்­டுள்­ளது.

சிட்னி, பிரிஸ்­பேன், பெர்த், டார்­வின், டவுன்ஸ்­வில், கோல்ட்­கோஸ்ட் உள்­ளிட்ட நக­ரங்­களில் நாட்­டின் மக்­கள்­தொ­கை­யில் பாதி, அதா­வது 12 மில்­லி­யன் மக்­கள் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ர­வின் கீழ் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லும் கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­யி­ருப்­ப­தால் 7வது நகரமாக அலிஸ் ஸ்பி­ரிங்ஸ் நக­ரம் முடக்­கப்­பட்­டது.

இந்த நக­ரத்­தின் அரு­கில் வசிக்­கும் பழங்­கு­டி­யி­ன­ருக்­கும் தொற்று பரவக்கூடும் என்று உள்­ளூர் அதி­கா­ரி­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே கடும் நெருக்கடி யில் இருப்பதாகக் கூறியுள்ள மாநில முதல்வர்கள், தடுப்­பூசி போடு­வதை துரி­தப்­ப­டுத்த வேண்­டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நாட்­டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. மேலும் முக்­கிய தடுப்­பூ­சி­யான ஆஸ்ட்­ரா­ஸெ­னகா பயன்­ப­டுத்­து­வ­தில் தொடர்ந்து குழப்­பம் நில­வு­கிறது.

பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் 40 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டுள்­ளார். ஆனால் குவின்ஸ்­லாந்து, மேற்கு ஆஸ்­தி­ரே­லிய முதல்­வர்­கள் அவ­ரது உத்­த­ர­வுக்கு எதிராக உள்ளனர்.

ஆஸ்­தி­ரே­லியா பல மாதப் போராட்­டத்­துக்­குப் பிறகு கிரு­மிப் பர­வலை முழு­மை­யாக கட்­டுக்­குள் கொண்டு வந்­தது.

எல்லை மூடல், ஹோட்டல் களில் தனிமைப்படுத்துதல், தொடர்பு தடங்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளால் கிருமிப் பரவலை அரசு தடுத்து நிறுத்தியது.

கடந்த ஆண்டு கிருமிப்பரவலே இல்லாத நாடாக ஆஸ்திரேலியா பெயர்பெற்றது. இவ்வாண்டில் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்பட்டன. ஆனால் ஹோட்டல் தனிமைப்படுத்தும் இடத்திலிருந்து தொற்று பரவியதால் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. சிட்­னி­யில் புதிய கிரு­மிப் பர­வல் குழு­மம் உருவானது. அதன் பிறகு ஐந்து மாநி­லம் மற்­றும் பல பகுதிகளுக்கு தொற்றுச் சம்பவங்கள் பரவின. பிரதமர் ஸ்காட் மோரிசனின் தடுப்பூசித் திட்டம் மெதுவாக நடை பெறுவதாகவும் குறை கூறப்படு கிறது.