ஒட்டாவா: கனடாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. இதுவரை 12 பேர் அதற்குப் பலியாகிவிட்டனர்.
சென்ற வெள்ளிக்கிழமையில் இருந்து 130க்கும் மேற்பட்ட திடீர் மரணச்சம்பவங்களை வேன்கூவர் போலிசார் கையாண்டு வந்துள்ளனர்.
அவர்களில் ெபரும்பாலோர் வயதானவர்கள் அல்லது நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
பெரும்பாலான மரணங்களில் தகிக்கவைக்கும் வெப்பமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
3வது நாளாக செவ்வாய்க் கிழமை அன்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் ஆக உச்சமாக 49.5 சென்டிகிரேட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இவ்வாரத்துக்கு முன்பு வரை வெப்பநிலை 45 சென்டிகிரேடை தாண்டியதில்லை. ஆனால் வட மேற்கு அமெரிக்கா, கனடாவில் தொடர்ந்து அனல்காற்று வீசுவதால் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தால் வானிலையில் மேலும் புதிய உச்சத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வேன்கூவரில் மட்டும் குறைந்தது 65 பேர் வெப்பத்துக்குப் பலியாகிவிட்டனர் என்று அந்நகரப் போலிசார் தெரிவித்தனர்.
பர்னபி போன்ற புறநகர்ப் பகுதி களில் 34ம், சர்ரேயில் 38ம் திடீர் மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
"இப்படியொரு வெப்பத்தை வேன்கூவர் சந்தித்ததில்லை. டஜன் கணக்கானோர் இதற்கு உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது," என்று காவலர் ஸ்டீவ் அடிசன் கூறினார்.
"போதுமான அதிகாரிகள் இல்லையென்றாலும் மக்களின் பாதுகாப்புக்கு எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். திடீர் மரணச் சம்பவங்கள் மும்மடங்காகப் பெருகி விட்டது," என்றார் அவர்.
வேன்கூவரின் கிழக்கே உள்ள சிறிய கிராமமான லிட்டனில் வசிக் கும் மேகான் ஃபான்ட்ரிச், வெளியே தலைகாட்ட முடியவில்லை என்றார்.
"வீட்டிலேயே முடங்கிக் கிடக் கிறோம். இதற்கு முன்பும் வெப் பத்தை அனுபவித்துள்ளோம். ஆனால் 30க்கும் தற்போதுள்ள 47 சென்டிகிரேடுக்கும் பெரிய வித்தி யாசம் உள்ளது," என்று அவர் தெரி வித்தார்.
கடும் வெப்பம் காரணமாக வேன்கூவரில் பள்ளிகளும் தடுப்பூசி நிலையங்களும் மூடப்பட்டன. வெப்பத்தைத் தணிக்க அதிகாரிகள் ஆங்காங்கே தற்காலிக நீருற்றுகளை அமைத்துள்ளனர்.
சாலை முனைகளில் தண்ணீர் தெளிப்பானும் அமைக்கப்பட்டுள்ளது. குளிர் சாதனங்களும் விசிறிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் அவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
வீட்டில் குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் காரில் உள்ள சாதனத்தைப் பயன்படுத்தி வெப் பத்தைப் போக்கி வருகின்றனர்.
அமெரிக்காவும் அனலில் கொதித்து வருகிறது. மேற்கு அமெரிக்காவில் உள்ள நகரங்களில் அவசரகால குளிரூட்டும் நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்குத் தண்ணீர் போத்தல்கள், தொப்பிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

