ஜகார்த்தா: கிருமித்தொற்று பரவலால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ள இந்தோனீசிய அரசாங்கம் மேலும் சில பகுதிகளுக்கு முடக்க நிலை உத்தரவை விரிவுபடுத்தியுள்ளது.
ஜாவா தீவைத் தொடர்ந்து சுமத்ரா தீவு முதல் பாப்புவா வரையிலான பெரும்பாலான பகுதிகளிலும் டெல்டா வகை கிருமிப் பரவல் வேகமெடுத்து உள்ளதால், அப்
பகுதிகளிலும் நேற்று முடக்க நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்தோனீசியாவின் கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள ஜாவா தீவில் பதிவாகும் எண்ணிக்கையைவிட குறைவுதான்.
இருப்பினும், அங்கு பெரியளவிலான சுகாதார கட்டமைப்பு இல்லாததால், மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழியத் தொடங்கி
விட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.
முடக்கநிலை கட்டுப்பாடு
களைத் தொடர்ந்து அத்தியாவசியமற்ற துறையைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறப்பட்டுள்ளனர். வர்த்தகங்கள், உணவகங்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாவாவில் சில மருத்துவமனைகள் கார் நிறுத்தும்
இடத்தில் தற்காலிக படுக்கைகள் அமைத்து சிகிச்சையளிக்கின்றன.
வேறு சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகின்றன.
ஜாவா தீவில் அலுவலகங்கள், பள்ளிவாசல்கள், பூங்காக்கள், கடைத்தொகுதிகள், உணவகங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உத்தரவை மீறி சில வர்த்தகங்கள் செயல்படு
வதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இந்தோனீசியாவில் நேற்று 34,379 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 1,040 பேர் பலியாகினர். தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாகவும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து 4வது நாளாகவும் ஆக அதிகமாக பதிவாகி வருகின்றன.
நாளொன்றுக்கு 50,000த்திற்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகக்கூடும் என்று அதிகாரிகள் நேற்று முன்தினம் எச்சரித்தனர்.
இந்தோனீசியாவில் மேலும் சில பகுதிகளில் முடக்கநிலை உத்தரவு

