சமூக ஊடக நிறுவனங்களின் மீது வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறும் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீதும் அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மீதும் நீதிமன்ற வழக்குகளைத் தொடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசியவாத கருத்துகளின் சுதந்திர வெளிப்பாட்டுக்கு இந்நிறுவனங்கள் சட்டவிரோதமாக குறுக்கே நிற்பதாக திரு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமாக விளங்கிய திரு டிரம்ப், வன்முறையை விளைவிக்கக்கூடிய கருத்துகள் மற்றும் பொய்யான தகவல்களை அடிக்கடி பரப்பியதாகக் கூறும் குற்றச்சாட்டுகளால் அங்கு அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டன. கடந்த அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் தோல்வி அடைந்ததை ஏற்க மறுக்கும் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தாக்குதலை நடத்தியதற்கு திரு டிரம்ப் சமூக ஊடகங்களில் பேசிய விதம் முக்கிய பங்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் உண்மையில் தாம் தேர்தலில் வென்றிருப்பதாகவும் திரு டிரம்ப் எந்த முகாந்தரமுமின்றி கூறினார்.

திரு டிரம்பின் முடிவு குறித்து சமூக ஊடக நிறுவனங்கள் இதுவரை எந்தக் கருத்தும் கூற மறுத்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!