காபூல்: ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி (85 விழுக்காடு) தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவுக்குச் சென்றிருக்கும் தலிபான் பேராளர் குழு இத்தகவலை நேற்று வெளியிட்டது.
ஆப்கானிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்தி மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்யாவுக்கு தலிபான் உறுதி அளித்தது.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் பல நகரங்களை தலிபான் கைப்பற்றி வருகிறது. தலிபானுடன் சண்டை போடாமல் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் பக்கத்து நாடான தஜிகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது,
தலிபான் ஆட்சிக்குப் பயந்து ஆப்கானியர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானுக்குள் ஐஎஸ் பயங்கரவாதிகள் நுழைந்துவிடாதபடி தமது அமைப்பு பார்த்துக்கொள்ளும் என்று தலிபான் பேராளர் குழு கூறியது. அதுமட்டுமல்லாது, ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தியை வேராடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது. இதற்கிடையே, எல்லைப் பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

