வெனிஸ்: பன்னாட்டு நிறுவனங்
களுக்கு நியாயமான வகையில் வரி விதிக்க வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஒப்பதல் அளிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தத்துக்கான கட்டமைப்பில் உள்ள பல்வேறு அம்சங்களில் உலகளாவிய வர்த்தக வரி
விகிதத்தை 15 விழுக்காடாக வைத்திருப்பதும் அடங்கும்.
இதற்கு 131 நாடுகள் இம்மாதம் இணக்கம் தெரிவித்தன. இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படக்
கூடும்.
முதலீடுகளை ஈர்க்க குறைவான வரி விகிதத்தை நாடுகள் வழங்கு வதைத் தடுக்க இந்த சீர்திருத்தக் கட்டமைப்பு இலக்கு கொண்டுள்ளது.
தற்போதைய அணுகுமுறையால் பல பன்னாட்டு நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவிலான
வரியைச் செலுத்துகின்றன.
உலகின் ஆகப் பணக்கார 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கலந்துகொண்ட மாநாடு அரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பிரெஞ்சு நிதி அமைச்சர் புருனோ லே மைரி தெரிவித்தார்.
மின்னிலக்கத் துறை ஜாம்பவான்களுக்கு நியாயமான வரியை விதிக்க ஜி20 நாடுகள் விழைகின்றன.
பெரும்பாலான நேரங்களில் இந்தப் பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலான வரி செலுத்து வதாகவும் இது ஏற்க முடியாத ஒன்று என்றும் திரு லே மைரி தெரிவித்தார்.
வரும் அக்டோபர் மாதம்
இத்தாலிய தலைநகரம் ரோமில் ஜி20 உச்சநிலை மாநாடு நடைபெற இருக்கிறது.
குறைந்தபட்ச வரி விகிதம் குறித்த இறுதி முடிவு அதற்கு முன் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் மாநாட்டில் குறைந்தபட்ச வரி விகிதம் குறித்து பெரும் அளவிலான கலந்துரையாடல் நடைபெறுகிறது.
ஒப்பந்தத்தைப் பற்றிய விவரங்கள் தெளிவான முறையில் முன்வைக்கப்பட்டு இன்னும் ஒப்புதல் தராதவர்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கூடுதல் வரி விகிதத்துக்கு அடிபோடும் நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கும்.
ஆக்ஸ்ஃபம் போன்ற ஆதரவு அமைப்புகள் வரி விகிதத்தை உயர்த்த அழைப்பு விடுத்துள்ளன.

