வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம் மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வமற்ற சந்திப்புக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
அதிகாரபூர்வமற்ற சந்திப்பில் கொவிட்-19 கிருமிப் பரவல், அதனால் நிகழ்ந்துள்ள பொருளியல் பாதிப்பு உள்ளிட்டவை பற்றிப் பேசப்படும்.
கிருமிப் பரவல் சூழலின் தாக்கத்தை ஆராய்வது சந்திப்பின் இலக்கு எனத் திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார். ஜப்பான், அமெரிக்கா, உட்பட 21 நாடுகள் ஒத்துழைப்பில் இடம்பெற்றுள்ளன. சந்திப்பு, வரும் வெள்ளிக்கிழமையன்று மெய்நிகர் வடிவில் நடத்தப்படும்.

