தென்­கொ­ரியா: தொற்று 7வது நாளாக ஆயி­ரத்­தைத் தாண்­டி­யது

தென்­கொ­ரியா: தொற்று 7வது நாளாக ஆயி­ரத்­தைத் தாண்­டி­யது

2 mins read
1e19c838-1d75-43d8-b470-30ea89780914
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் தொடர்ந்து 7வது நாளாக தொற்று எண்­ணிக்கை ஆயி­ரத்­தைத் தாண்டி­யுள்­ளது.

நேற்று முன்­தி­னம் தொற்று 1,150ஆக பதி­வா­னது. அதை­ய­டுத்து அந்­நாடு குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்­கும் வர்த்­தக நட­வ­டிக்கை ஆகி­ய­வற்­றுக்கும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது. சோலில் இது­வரை கண்­டி­ராத வகை­யில் தொற்று உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. அதற்­குக் கார­ணம் வெகு­வி­ரை­வில் பர­வக்­கூ­டிய டெல்டா வகை உரு­மா­றிய கிரு­மியே என்­கின்­ற­னர் அதி­கா­ரி­கள். கிரு­மித்­தொற்று பாதிப்­பின் நாள் எண்­ணிக்கை ஆயி­ரத்­தைத் தாண்­டி­னா­லும் இது கடந்த வாரம் இருந்த எண்­ணிக்­கை­யான 1,378ஐக் காட்­டி­லும் குறைவு.

இப்­போது அடை­யா­ளம் காணப்­பட்ட கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் முன்பு கண்­ட­றி­யப்­பட்ட குழு­மங்­க­ளைக் காட்­டி­லும் மிக­வும் ஆபத்­தா­னவை என்று கூறப்­ப­டு­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் கொரோனா தொற்­றுக்கு எதி­ராக தடுப்­பூசி போடும் பணி தீவி­ர­மாக முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் பெரும்­பா­லான முதி­யோர் மற்­றும் இய­லா­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

தென்­கொ­ரி­யா­வில் புதிய தொற்று எண்­ணிக்­கை­யைச் சேர்த்து மொத்­தம் 170,296 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தொற்­றுக்கு 2,048 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இதனை தென்­கொ­ரி­யா­வின் நோய்க் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு முகவை நேற்று தெரி­வித்­தது.

தென்­கொ­ரியா முன்­ன­தாக நாள் ஒன்­றுக்கு 850,000 தடுப்­பூசி போடு­வ­தற்கு இலக்­குக் கொண்­டி­ருந்­தது. ஆனால், கடந்த சில வாரங்­க­ளாக அது நாளுக்கு 30,000 பேராக மெதுவடைந்துள்ளது.

52 மில்­லி­யன் பேர் மக்­கள் தொகை­யுள்ள தென்­கொ­ரி­யா­வில் இது­வரை 11.6 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே இரு­முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

30.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கத் தர­வு­கள் காட்­டு­கின்­றன. அந்­நாட்டுக்கு மேலும் 9 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­களை இந்த மாதத்­திற்­குள் கிடைக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.