சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நடைமுறைப்படுத்தப்
பட்டுள்ள முடக்கநிலை குறைந்தது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
சிட்னியில் விதிக்கப்பட்டுள்ள முடக்கநிலை நாளையுடன் முடிவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் இம்மாதம் 30ஆம் தேதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்லியன் அதை ஏற்க மறுத்துவிட்டார். கடந்த மூன்று வாரங்களாக சிட்னியில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்
பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் டெல்டா கொவிட்-19 கிருமி வகையைக் கட்டுப்படுத்த சிட்னி
சிரமப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி புதிதாக 97 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 89 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. சமூக அளவிலான பாதிப்பு இல்லாமல் இருக்க ஆஸ்திரேலியா இலக்கு கொண்டுள்ளது.
சமூகத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க முடக்கநிலை
அவசியம் என திருவாட்டி
பெரிஜிக்லியன் கூறினார்.

