பிரதமர் முகைதீனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மலேசிய அமைச்சர்கள்

பிரதமர் முகைதீனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மலேசிய அமைச்சர்கள்

1 mins read
c6bd4f2d-0be4-48f4-846f-f2a089b95bb3
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு அந்­நாட்டு அமைச்­சர்­கள் அனை­

வ­ரும் முழு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­க­ளில் அம்­னோ­வைச் சேர்ந்த ஒன்­பது பேரும் அடங்­கு­வர். மலே­சி­யா­வில் கொவிட்-19 சூழல் மோச­ம­டைந்து வரு­கிறது. இத்­த­கைய சூழ­லில் நாட்டைத் திரு முகை­தீன் வழி­ந­டத்த வேண்­டும் என்று அமைச்­சர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அனை­வ­ரின் கருத்­து­க­ளை­யும் கருத்­தில் கொண்டு அர­சாங்கம் முடி­வு­களை எடுக்­கும் என்று அமைச்­சர்கள் நேற்று உறுதி அளித்­த­னர். கொவிட்-19

நெருக்­கடி­நி­லை­யி­லி­ருந்து மலேசியா மீண்டு வரு­வதே

முக்­கிய இலக்கு என்று அவர்­கள் கூறி­னார்.

ஆளும் பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யி­லி­ருந்து அம்னோ வில­கு­வ­தாக அதன் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி அண்­மை­யில் அறி­வித்­தார்.

ஆனால் அம்னோ அமைச்­சர் கள் திரு முகை­தீ­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­திருப்­பது அக்­கட்­சி­யில் ஏற்­பட்­டுள்ள பிள­வைக் காட்­டு­

வ­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர். திரு முகைதீன் பிரதமராக நீடிக்க அம்னோ அமைச்சர்களின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.