பேங்காக்: உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ரசெனக்கா கொவிட்-19 தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்துவது குறித்து தாய்லாந்து பரிசீலனை செய்து வருகிறது.
தாய்லாந்து மக்களுக்குப் போதுமான தடுப்பூசி உறுதி செய்யப்பட்ட பிறகே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தாய்லாந்து சுகாதார அமைச்சு இலக்கு கொண்டிருக்கிறது.
இதுகுறித்து தாய்லாந்தில் செயல்படும் ஆஸ்ட்ரசெனக்கா நிறுவனத்திடம் அது பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.

