'கிருமிப் பரவல் மோசமடைகிறது'

'கிருமிப் பரவல் மோசமடைகிறது'

1 mins read
35fb50fc-84a4-406d-9e03-40306a35a967
-

ஜகார்த்தா: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் இந்­தோ­னீ­சி­யா­வில் மோச­

ம­டைந்து வரு­வ­தா­க­வும் டெல்டா வகை கிரு­மித்­தொற்று கார­ண­மாக எதிர்­பார்த்­த­தை­விட வேக­மாக

பர­வி­யுள்­ள­த­கா­வும் அந்­நாட்­டின் மூத்த அமைச்­சர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டும் அங்கு கிரு­மி

பர­வல் கட்­டுக்­குள் வர­வில்லை.

புதன்­கி­ழ­மை­யன்று ஆக அதி­க­மாக 54,000 சம்­ப­வங்­கள் அங்கு பதி­வா­கின. இம்­மாத தொடக்­கத்­தில் இருந்­த­தை­விட இது பத்து மடங்கு அதி­கம்.

இந்­தி­யா­வில் முதன்­மு­த­லில் அடை­யா­ளம் காணப்­பட்ட டெல்டா வகை கிரு­மி பர­வு­வ­தற்­கான காலம் இரண்டு முதல் மூன்று வாரங்­க­ளாக இருக்­கும் நிலை­யில் அன்­றாட தொற்று சம்­ப­வங்­கள் மேலும் அதி­க­ரிக்­கும் என்று இந்­தோ­னீ­சிய மூத்த அமைச்­சர் லுஹுத் பாண்ட்­ஜெய்­டன் கூறி­னார்.

"நாங்­கள் ஏற்­கெ­னவே மோச­மான நிலை­யில் இருக்­கி­றோம்.

"நாளொன்­றுக்கு 60,000 அல்­லது அதற்­கும் சற்று கூடு­த­லான கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் என்­பது பர­வா­யில்லை. 100,000த்திற்கு போகாது என்று நம்­பு­கி­றோம். ஆனால் அந்த சூழ்­நி­லையை எதிர்­கொள்ள தயா­ரா­கி­றோம்," என்­றும் அவர் சொன்­னார்.

ஜாவா தீவில் உள்ள மருத்­து­வ­

ம­னை­களில் அண்­மைய நாட்­க­ளாக மருத்­துவ படுக்­கை­கள் நிரம்­பி­விட்­டன. சிகிச்­சை­ய­ளிக்க முடி­யா­மல் நோயா­ளி­கள் திருப்பி அனுப்­பப்­

ப­டு­கின்­ற­னர்.

எனவே, அங்கு பல்­வேறு கட்ட­டங்­கள் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன. புதிய மருத்­துவ பட்­ட­தா­ரி­கள், தாதி­யர்­பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஜன­வ­ரி­யில் தடுப்­பூசி போட தொடங்­கிய இந்­தோ­னீ­சி­யா­வின் 270 மில்­லி­யன் மக்­கட்­தொ­கை­யில் சுமார் 5.8 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இரண்டு தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.