பெய்ஜிங்: சீனாவில் இனி கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படக்கூடும்.
2019ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் முதலில் சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. ஆனால்
கடுமையான கட்டுப்பாடுகளால் அங்கு கிருமித்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
டெல்டா வகை கிருமித்
தொற்று அச்சம் காரணமாக இந்தத் தடை கொண்டு வரப்
படவுள்ளது. இத்தடை நாட்டின் 2ஆம் நிலை நகரங்களில் முதலில் விதிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் இத்தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது 1.4 பில்லியன் மக்கள்
தொகையில் 64 விழுக்காட்டி
னருக்குத் தடுப்பூசி போடுவதற்கான இலக்கைக் கொண்டுள்ளது சீனாவில் இந்த புதிய நடைமுறை, அதிகமானோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள தூண்டும்.

