ஐந்தாவது முறையாக முடங்கியது மெல்பர்ன்

ஐந்தாவது முறையாக முடங்கியது மெல்பர்ன்

1 mins read
005e6273-c83b-4baf-9cf7-f4896addc53a
-

சிட்னி: சிட்­னி­யில் இருந்து திரும்­பி­ய­வர்­க­ளால் மெல்­பர்­னில் டெல்டா வகை கிரு­மிப் பர­வல் தலை­தூக்­கி­யுள்­ள­தைத் தொடர்ந்து விக்­டோ­ரியா மாநி­லம் மீண்­டும் முடங்­கி­யது.

மெல்­பர்ன் மட்­டு­மல்­லா­மல் விக்­டோ­ரியா மாநி­லம் முழு­வ­தற்­கும் ஐந்து நாள் முடக்­க­நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கொள்ளை நோயான கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அங்கு ஐந்­தா­வது முறை­யாக முடக்­க­நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சிட்­னி­யைச் சேர்ந்த ஊழி­யர்­கள் மெல்­பர்­னில் உள்ள வீடு ஒன்­றிற்கு தள­வாட பொருட்­களை கொண்டு சென்­ற­தை­ய­டுத்து அங்கு மீண்­டும் கிரு­மி பர­வ தொடங்­கி­யது. இதை­

ய­டுத்து அண்­மைய கிரு­மிப் பர­வ­லால் அங்கு இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"முடக்­க­நிலை உத்­த­ரவு அவ­சி­யம். முடக்­க­நிலை உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்த தயங்­கி­னால், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது சிர­ம­மாகிவிடும்," என்­றார் விக்­டோ­ரியா மாநில முதல்வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ்.

இதற்­கி­டையே, சிட்­னி­யில் இருந்து சென்ற பய­ணி­க­ளால் பிரிஸ்­பனில் புதன்­கி­ழ­மை­யன்று 3 தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

எனவே, விக்­டோ­ரியா, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லங்­க­ளு­ட­னான பயண ஏற்­பாட்டை நியூ­சி­லாந்து நிறுத்தி வைத்­துள்­ளது.

தடுப்­பூசி போடும் பணி ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மிக­வும் மந்­த­மாக இருப்­பதே, அங்கு டெல்டா வகை தொற்று அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கான கார­ணமாக கூறப்­ப­டு­கிறது.

பல்­வேறு விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து போது­மான தடுப்­பூ­சி­க­ளைப் பெறு­வ­தில் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் மிக­வும் மெது­வாக செயல்­ப­டு­வ­தாக சுகா­தார வல்­லு­நர்­கள், அர­சி­யல் எதி­ரி­கள் விமர்­சித்து வரு­கின்­றனர்.

எனவே, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தடுப்­பூசி போடும் பணி­யைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டிய நெருக்­க­டி­யில் உள்­ளார் ஸ்காட் மோரி­சன்.